
போரடித்த சாப்பாடு ; ராஷ்மிகாவை ஸ்பெஷலாக கவனித்த ரன்பீர் கபூர்
இந்த நிலையில் திடீரென ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு ராஷ்மிகாவுக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை பரினிதி சோப்ரா சில காரணங்களால் விலகி விட அவருக்கு பதிலாக தற்போது ராஷ்மிகா இந்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ராஷ்மிகாவுக்கு ஒரே விதமான காலை உணவை சாப்பிட்டு போரடித்து விட்டதாம். இதுகுறித்து நாயகன் ரன்பீர் கபூரிடம் குறைபட்டுக்கொள்ள, அவரோ தனது தனிப்பட்ட சமையல்காரரை வைத்து ராஷ்மிகாவிற்கு ஸ்பெஷலாக உணவு சமைத்துக்கொண்டு வந்து தந்துள்ளார்.
ஆனாலும் அதுவும் படப்பிடிப்பில் கொடுக்கப்படும் சாப்பாடு போலவே இருப்பதைப் பார்த்து முதலில் அதிர்ச்சியான ராஷ்மிகா, பின்னர் அதை சாப்பிட்டு பார்த்துவிட்டு அதன் சுவை முற்றிலும் வேறாக, விரும்பி உண்ணக்கூடியதாக இருப்பதை உணர்ந்தாராம். இதுகுறித்து ரன்பீர் கபூரிடம் ராஷ்மிகா கூறும்போது உங்களுக்கு கிடைத்தது போன்று திறமையான சமையல்காரர் எங்களுக்கு கிடைக்கவில்லையே என்று தனது மனக்குறையை வெளிப்படுத்தினாராம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!