
அன்பான ரசிகர்களுக்கு.... தேசிய விருது பற்றி சூர்யா நெகிழ்ச்சி
பாரம்பரிய உடையில் இவர்கள் அனைவரும் விழாவிற்கு வந்து விருதுகளை பெற்றனர். சூர்யாவிற்கு முதல் தேசிய விருது என்பதால் சூர்யாவின் அப்பா சிவகுமார், அம்மா லக்ஷமி ஆகியோரும், சூர்யாவின் குழந்தைகளும் பங்கேற்றனர். பெற்றோர்கள் வாங்கிய விருதை ஏந்திய படி தியா, தேவ் இருவரும் உற்சாகமாக போஸ் கொடுத்த போட்டோக்கள் வைரலாகின. அதோடு சூர்யா விருது பெற்றபோது ஜோதிகாவும், ஜோதிகா விருது பெற்றபோது சூர்யாவும் போனில் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
தேசிய விருது பெற்ற கையோடு தனது குடும்பத்தினர் உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ள சூர்யா, ‛‛சுதாவிற்கு என்றென்றும் நன்றி. விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த விருது எனது அன்பான ரசிகர்களுக்காக..."" என பதிவிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!