
16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் பரத் - வசந்தபாலன்
இதுகுறித்து பரத் தெரிவித்திருப்பதாவது: 2006ல் வசந்தபாலன் வெயில் என்ற காவியத்தை உருவாக்கினார். அவருடன் இணைந்து மீண்டும் பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது வரவிருக்கும் அடுத்த படத்தில் அவர் முக்கிய மனிதராக இருக்கப் போகிறார். இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வரும் என்கிறார்.
தற்போது வசந்தபாலன் அநீதி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தில் ஷங்கருடன் இணைந்துள்ளார். இந்த பணிகள் முடிந்ததும் பரத் படத்தை இயக்குவார் என்று தெரிகிறது. இருவரும் இணைய இருப்பது ஒரு வெப் தொடர் என்றும் கூறப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!