
ரஜினி நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் கார்த்தி
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட ரஜினி மற்றும் கமல் இருவரும் பேசியதிலிருந்து ஒரு புதிய தகவல் தெரியவந்தது. ரஜினி பேசும்போது ஒருமுறை ஜெயலலிதா தனது பேட்டியில் பொன்னியின் செல்வன் கதையில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கூறியதாக தனது பேச்சில் குறிப்பிட்டார்.
அதேபோல இந்த நாவலை படமாக்கும் முயற்சியில் கமல் இறங்கியபோது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அதுகுறித்த பகிர்ந்துகொண்ட சமயத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக் என்றும், ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நீ நடி என்றும் தன்னிடம் கூறியதாக கமல் ஒரு தகவலை தெரிவித்தார். அந்த வகையில் வந்தியத்தேவன் கதாபாத்திரம் ரஜினிக்கு பொருத்தமாக இருக்கும் என இரண்டு முன்னணி ஜாம்பவான்கள் அப்போதே குறிப்பிட்டிருந்தனர். அந்த கதாபாத்திரத்தில் தான் தற்போது கார்த்தி நடித்துள்ளார்.
அதேசமயம் ரஜினி இந்தக் கதையில் வரும் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பி மணிரத்னத்திடம் கேட்டுள்ளார் ஆனால் அவரது வேண்டுகோளை மறுத்துவிட்டார் மணிரத்னம்..





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!