
கோப்ரா படப்பிடிப்பில் டார்ச்சர் செய்த விக்ரம்
இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் விக்ரம் பேசியதாவது: இயக்குநர் அஜய் ஞானமுத்து, டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் என ஒவ்வொரு படமும் வித்தியாசமான ஜானரில் இயக்கியிருந்தார். கோப்ரா படத்தையும் அவர் வழக்கமானதைக் காட்டிலும் புதிதாக இயக்கியிருக்கிறார். இந்தப்படம் அவருடைய கற்பனை படைப்பு. நாங்கள் எல்லாம் அதற்கு ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறோம்.
என்னுடைய நடிப்பில் தயாரான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படத்திற்காக திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என ஒவ்வொரு இடத்திற்கு செல்லும்போதெல்லாம் ரசிகர்களின் வரவேற்பும், அவர்கள் காட்டும் அன்பும் பிரமிக்க வைத்தது. அவர்கள் என் மீது காட்டும் அன்பை அளவிட முடியாது. தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கும் சென்று ரசிகர்களை சந்திக்கலாம் என்ற திட்டமும் இருக்கிறது. கோப்ரா படத்திற்கு படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதரவு தாருங்கள். என்றார்.
நிகழ்ச்சியில் விக்ரம் ஹீரோயின்களுடன் ஜாலியாக கலந்துரையாடினார். இதில் பேசிய மீனாட்சி கோவிந்தராஜனும், மிருணாளினி ரவியும் “படப்பிடிப்பு இரவில் நடக்கும்போது நாங்கள் களைப்பால் நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கி விடுவோம். திடீரென விக்ரம் சார் எங்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி விடுவார். நாங்கள் தூங்குவதை வீடியோ எடுத்து வைத்துக் கலாய்ப்பார். திடீரென முகத்து நேராக உணவு தட்டை ஏந்தி நின்று கொண்டு சாப்பிடச் சொல்வார். இப்படி படப்பிடிப்பு காலங்களில் எங்களை நிறைய கலாட்டா செய்து செல்லமாக டார்ச்சர் செய்தார்” என்றார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!