
தெலுங்குப் படத்தை நிறுத்திவிட்டு வருகிறாரா ஷங்கர்?
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு செப்டம்பர் மாதத்தில் "இந்தியன் 2" படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. படத்தை விரைந்து முடித்துத் தருமாறு ஷங்கரிடம் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்களாம். "விக்ரம்" படத்தின் மாபெரும் வெற்றியில் படத்தை எவ்வளவு சீக்கிரம் வெளியிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிட்டால் நல்ல வசூலைப் பெறலாம் என்பதே எண்ணம்.
அதனால், ஷங்கர் தெலுங்குப் படத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு "இந்தியன் 2" படத்தை முடித்துவிட்டு வர உள்ளார் என தெலுங்குத் திரையுலகத்தில் பேசி வருகிறார்களாம். அதற்குள் ராம் சரண் வேறு ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் சொல்கிறார்கள்.
"இந்தியன் 2" படப்பிடிப்பு ஆரம்பமான பின்புதான் எதுவும் உறுதியாகத் தெரிய வரும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!