
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா : தமிழ்தாய் வாழ்த்துப் பாடி அசத்திய சிவகார்த்திகேயன் மகள்
ஆக 10, 2022
Advertisement
தமிழகத்தில் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சி செஸ் ஒலிம்பியாட் பற்றி தான். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. நேற்று இந்த போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் பல கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. அதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இந்த வாழ்த்துப்பாடல் பாடிய குழுவில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகளான ஆராதனாவும் இணைந்து பாடினார். தற்போது ஆராதனா பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆராதனா இதற்கு முன்னர் "கனா" படத்தில் "வாயாடி பெத்த புள்ள" பாடலை பாடி அந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!