
துரிதத்தில் சாலை பயணக் கதை
புதியவரான நரேஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் மில்டனின் உதவியாளராக பணியாற்றிய வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் குறித்து இயக்குனர் சீனிவாசன் கூறியதாவது: இது ஒரு ரோட் மூவி நாயகனும், நாயகியும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக சாலை வழியாக பயணம் மேற்கொள்கிறார்கள். அந்த பயணத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும், தீர்வுகளும்தான் படம்.
உளுந்தூர்பேட்டையில் தங்கி, அங்கிருந்து சென்னை, மதுரை, கோவை, சேலம் என அனைத்து திசையிலும் தினசரி பயணித்து படப்பிடிப்பு நடத்தினோம்.. குறிப்பாக வாகனங்கள் பரபரப்பாக சென்றுகொண்டு இருக்கும்போத லைவ்வாக படப்பிடிப்பு நடத்தினோம்.. இதில் ஒரு காட்சியை படமாக்கும்போது சிறிய தவறு நிகழ்ந்தாலும், ரீடேக் எடுப்பது தான் எங்களுக்கு சவாலான விஷயமாக இருந்தது. காட்சியை படமாக்கிய இடத்திற்கே திரும்பி வருவதற்காக மீண்டும் சில கிலோமீட்டர்கள் பயணித்து சுற்றிவர வேண்டி இருந்தது என்கிறார் இயக்குனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!