
பொன்னியின் செல்வன் - மணிரத்னம், விக்ரமுக்கு எதிராக வழக்கு
அதே சமயம் இந்த படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் நெற்றியில் நாமம் அணிந்திருப்பது போல போஸ்டர் வெளியாகி உள்ளது. தற்போது வழக்கறிஞர் செல்வம் என்பவர் இது குறித்து மணிரத்தினம் மீதும் விக்ரம் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அதில், சோழர்கள் நெற்றியில் நாமம் அணிவதில்லை என்றும் அவர்களது கதாபாத்திரத்தை இதில் தவறாக சித்தரித்துள்ளார்கள் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள அவர் இந்த படத்தை தனக்கு பிரத்யேக காட்சி ஒன்றை திரையிட்டு காட்ட வேண்டும் என்றும் அதில் வேறு ஏதேனும் காட்சிகள் இதுபோன்ற இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே இந்த படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே சமயம் விக்ரம் நடித்துள்ள கரிகாலன் கதாபாத்திரம் ஒரு மாவீரன் மற்றும் இளவரசன் கதாபாத்திரம். அவர் போருக்கு கிளம்பும்போது வெற்றி திலகமாக குங்குமம் தரித்து செல்வது போன்று தான் அவரது புகைப்படம் இருக்கிறது. இதில் ஏன் குறை கண்டுபிடிக்கிறார்கள் என்று பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர வாசகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!