
உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு கழகத் தலைவன் ?
அந்த விதத்தில் அவர் நடித்து "நெஞ்சுக்கு நீதி" படம் வெளிவந்தது. இதற்கடுத்து அவர் நடித்து வர உள்ள படத்திற்கு "கழகத் தலைவன்" எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. "தடையறத் தாக்க, மீகாமன், தடம்" ஆகிய படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இப்படத்தை இயக்கியுள்ளார். "ஈஸ்வரன், பூமி" படங்களில் கதாநாயகியாக நடித்த நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பொருளாதாரக் குற்றங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளதாம். அதைச் சுற்றி நடக்கும் அரசியல் விஷயங்களும் படத்தில் உண்டாம். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்தாலும் இறுதிக் கட்டப்பணிகளை இயக்குனர் மகிழ் திருமேனி பொறுமையாக இழைத்து வருகிறாராம். விரைவில் படத்தின் முதல் பார்வை வெளியாகும் எனத் தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!