
கர்நாடகம் சினிமாவை கடவுளாக கொண்டாடுகிறது: கிச்சா சுதீப்
படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது இதில் கலந்து கொண்டு கிச்சா சுதீப் பேசியதாவது: நான் சினிமாவை நம்புகிறேன், சினிமாவை தான் காதலிக்கிறேன். அதுதான் எங்களை இங்கு வரை அழைத்து வந்துள்ளது. இது ஒரு நல்ல படைப்பு, இந்தப்படத்தில் நானும் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. தமிழில் நல்ல வாய்ப்புகள் வரும்போது, அழைக்கும்போது நடிப்பேன். கர்நாடகா சினிமாவை கடவுளாக கொண்டாடும் இடம், கேஜிஎப் மூலம் அது எல்லா இடத்திலும் தெரிவது மகிழ்ச்சி. இந்தப்படம் அனைவரையும் புது உலகிற்கு கூட்டிச் செல்லும். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!