
சினிமாவில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் வளர்ந்துள்ளனர் : ரெஜினா சொல்கிறார்
இந்த தொடரின் அறிமுக நிகழ்ச்சியில் ரெஜினா கூறியதாவது: ஆன்யாஸ் டுடோரியல் போன்ற சைக்காலஜிகள், திரில்லர் கதைகள் வருவது மகிழ்ச்சி, நான் நடித்த மது கதாபாத்திரத்தை கண்டிப்பாக தவற விடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன். பல்லவி போன்ற திறமையான ஆட்கள் சினிமாவிற்கு வருவது மகிழ்ச்சி.
நான் அறிமுகமான போது திரைத்துறையில் பெண்கள் மிக குறைவாக இருந்தார்கள் இப்போது ஆண்களுக்கு இணையாக பெண்கள் வளர்ந்திருப்பது மகிழ்ச்சி. பல பெண்கள் இணைந்து இந்த தொடரை உருவாக்கி உள்ளோம். இதனை இயக்கி உள்ள பல்லவி ஏ.ஆர்.முருகதாஸ் போன்று பக்கா கமர்ஷியல் இயக்குனராக வளர்வார். பல பெரிய ஹீரோக்களை இயக்குவார். இவ்வாறு ரெஜினா பேசினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!