
விவேக் நினைவாக பீ ஹேப்பி வனம்!
இந்நிலையில், விவேக் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவரது நினைவாக "பீ ஹேப்பி" என்ற பெயரில், ஒரு ஏக்கரில் மேலும் ஒரு வனப்பூங்காவை அமைக்க, "சிறுதுளி" அமைப்பு திட்டமிட்டுள்ளது. "சிறுதுளி" அமைப்பின் 19ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நடிகர் விவேக் நினைவாக அமைக்கப்பட உள்ள இந்த வனத்துக்கு, பச்சாபாளையத்தில் நேற்று முன்தினம் பூமி பூஜை நடந்தது."சிறுதுளி" அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது: நடிகர் விவேக் இயற்கையை பெரிதும் நேசித்தவர். ஏராளமான மரங்களை வளர்த்து, மக்களிடம் சுற்றுச்சூழல் ஆர்வத்தை விதைத்தவர்.
சிறுதுளி அமைப்புடன் இணைந்து, பல்வேறு பணிகளை அவர் செய்துள்ளார். அவரின் நினைவாக ஒரு ஏக்கரில், "பி ஹேப்பி" வனம் என்ற பூங்கா அமைக்கப்படுகிறது. வெகுவிரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு, அவர்கள் கூறினர். நடிகர் விவேக் பேசிய சினிமா வசனங்களில், "பீ ஹேப்பி" என்ற வார்த்தையும் மிகவும் பிரபலம். இதை வைத்து "மீம்ஸ்"களும் அவ்வப்போது வெளிவரும். அந்த வார்த்தையை மையப்படுத்தியே வனம் அமைய உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!