
எஸ்பிபி 75 ; தடுமாறிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கைகொடுத்த எஸ்பிபி சரண்
குறிப்பாக ஏ.ஆர் ரஹ்மான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையேறி எஸ்பிபி.,யின் ஹிட் பாடலான முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை இடையிலிருந்து பாட ஆரம்பித்தார். சில வரிகள் பாடியதும் அதற்கடுத்த வரிகள் அவருக்கு நினைவில் வராமல் சற்று தடுமாறினார். உடனே அருகிலிருந்த எஸ்பிபி சரண் அந்த பாடலை அவர் விட்ட இடத்திலிருந்து சில வரிகள் பாடி கைகொடுக்க அதற்கடுத்த வரிகளை இருவருமே கோரஸாக சேர்ந்து பாட அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!