
கார்த்தியை இயக்கும் அருண்ராஜா காமராஜ்
கனா படத்தை அடுத்து கார்த்தியை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார் அருண் ராஜா காமராஜ். அப்போது அவர் பல படங்களில் பிசியாக இருந்துள்ளார். அதன்காரணமாகவே உதயநிதி நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது கார்த்தி நடிக்கும் படத்தை அடுத்தபடியாக இயக்குவதற்கு தயாராகிவிட்டார் அருண்ராஜா காமராஜ்.
பல மொழி படமாக உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க தென்னாப்பிரிக்காவில் நடக்கும் கதையில் உருவாகிறதாம். இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகரிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தற்போது ராஜூமுருகன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார் கார்த்தி. அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அருண் ராஜா காமராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்திருக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!