
மகேஷ் பாபுவிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்
மே 03, 2022
Advertisement
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரி பாட்டா எனும் தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை பரசுராம் இயக்கி உள்ளார் . வருகின்ற மே 12ந்தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகளில் ஒரு பாடல் காட்சி ஒன்றில் நடித்து கொண்டிருந்தபோது, மகேஷ் பாபுவின் முகத்தில் தவறுதலாக கீர்த்தி சுரேஷ் அடித்து விட்டாராம் .
இதுபற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, "நடிக்கும்போது தெரியாமல் மகேஷ் பாபுவின் முகத்தில் அடித்து விட்டேன். உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதனால் ஒன்றும் இல்லை. கவலைப்பட வேண்டாம் என அவர் என்னிடம் கூறினார். 3 முறை அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். அதனை அவர் லேசான விசயங்களில் ஒன்றாக எடுத்து கொண்டார் என கூறியுள்ளார்.
இதுபற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, "நடிக்கும்போது தெரியாமல் மகேஷ் பாபுவின் முகத்தில் அடித்து விட்டேன். உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதனால் ஒன்றும் இல்லை. கவலைப்பட வேண்டாம் என அவர் என்னிடம் கூறினார். 3 முறை அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். அதனை அவர் லேசான விசயங்களில் ஒன்றாக எடுத்து கொண்டார் என கூறியுள்ளார்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!