செல்பி எடுக்காத ஆத்திரத்தில் அனுபமாவிடம் ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள்
Advertisement
Advertisement
செல்பி எடுக்காத ஆத்திரத்தில் அனுபமாவிடம் ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள்
ஏப் 29, 2022
அ நிறம் | அளவு
Advertisement
பிரேமம் படத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி. தள்ளிப்போகாதே போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் பிசியாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூர்யா பேட்டை என்ற பகுதியில் ஒரு வணிக வளாகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். இவர் வருவதை அறிந்து அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து உள்ளார்கள். அப்போது அங்கு சென்ற அனுபமா ரசிகர்களைப் பார்த்து கையசைத்து படி சென்றுள்ளார். ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும் தனது காரில் ஏற வந்த அவருடன் செல்பி எடுப்பதற்கு ரசிகர்கள் சூழ்ந்து உள்ளார்கள். ஆனால் அனுபவம் போலீஸ் பந்தோபஸ்துடன் தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட முற்பட்டுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ரசிகர்கள் அவரது காரை செல்லவிடாமல் ரகளை செய்ததோடு, கார் டயரில் காற்றை பிடுங்கி விட்டு உள்ளார்கள். இதனால் வேறொரு காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு உள்ளார் அனுபமா. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!