
தனுஷ் என் மகன் : மேலூர் தம்பதிகள் சீராய்வு மனு தாக்கல்
ஏப் 23, 2022
Advertisement
மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் நடிகர் தனுஷ் எங்கள் மகன், அவர் எங்களை பராமரிக்க வேண்டும் எனறு பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மேலூர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தனுஷ் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மேலூர் தம்பதிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் தனுஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் போலியானது என்று மேலூர் தம்பதிகள் மதுரை ஜூடியசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த குற்றச்சாட்டிற்கு போதிய முகாந்திரம் இல்லை என இந்த மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்தது.
இத்தோடு இந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக கருதிய நிலையில், தற்போது மேலூர் தம்பதிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் தனுஷின் பிறப்பு சான்றிதழின் உண்மை தன்மை அறிய சென்னை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு இன்னும் வரவில்லை. அதற்கு முன்னதாக எங்கள் வழக்கை தள்ளுபடி செய்ததற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதனால் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சென்னை மாநகராட்சி தனுஷின் பிறப்பு சான்றிதழ் உண்மையானதுதான் என்று சான்றளித்தால் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலூர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தனுஷ் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மேலூர் தம்பதிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் தனுஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் போலியானது என்று மேலூர் தம்பதிகள் மதுரை ஜூடியசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த குற்றச்சாட்டிற்கு போதிய முகாந்திரம் இல்லை என இந்த மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்தது.
இத்தோடு இந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக கருதிய நிலையில், தற்போது மேலூர் தம்பதிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் தனுஷின் பிறப்பு சான்றிதழின் உண்மை தன்மை அறிய சென்னை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு இன்னும் வரவில்லை. அதற்கு முன்னதாக எங்கள் வழக்கை தள்ளுபடி செய்ததற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதனால் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சென்னை மாநகராட்சி தனுஷின் பிறப்பு சான்றிதழ் உண்மையானதுதான் என்று சான்றளித்தால் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!