
வனவாசம் முடிந்து திரும்பி இருக்கிறேன்: வி.பிரியா
இந்த தொடரின் அறிமுக விழாவில் அவர் கூறியதாவது: வனவாசம் முடித்து மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்திருக்கிறேன். கண்ட நாள் முதல் படத்தில் இருந்தது போல் ஒரு சிறு நம்பிக்கையில் தான் இதை தொடங்கினேன். எல்லோரும் இதில் அதே நம்பிக்கையோடு உழைத்துள்ளார்கள்.
பிரகாஷ்ராஜு சாருக்கு என் வாழ்க்கையில் முக்கிய இடமுண்டு. எனக்கு வாய்ப்பு கொடுத்தவர். அவர் இந்த தொடரின் நாயகனாக நடித்துள்ளார். அவரை தவிர இந்த ரோலை யாரும் செய்ய முடியாது. ஜான் விஜய், சம்பத் என அனைவரும் அட்டகாசமாக நடித்துள்ளார்கள். இதில் எட்டு அத்தியாயத்திலும் தனித்தனி கதை இருக்கும், அதே நேரத்தில் பின்னணியில் ஒரு ஹைப்பர்லிங்க் தொடர்பு இருக்கும். இது ஒரு அற்புதமான அனுபவம். இந்த ஒரிஜினல் சீரீஸ் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும். என்றார் பிரியா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!