
27 வருடம் கழித்து 2ம் பாகத்தில் ஹீரோவாக நடிக்கும் பாபு ஆண்டனி
இது ஒரு பக்கம் இருக்க 1995ல் பாபு ஆண்டனி கதாநாயகனாக நடித்து வெளியான படம் சந்தா. இந்தப்படம் வெளியான சமயத்தில் பல படங்களில் அவர் வில்லனாக நடித்து வந்தாலும், சந்தா படத்தில் அவர் நடித்த சுல்தான் என்கிற கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக அந்தப்படத்தில் பாபு ஆண்டனி அணிந்திருந்த உடை, பேசிய வசனங்கள், அவர் காட்டிய ஸ்டைல் எல்லாமே இளைஞர்களைக் கவர்ந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் பாபு ஆண்டனி. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் சுனில் தான் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளார். இந்த கதை குறித்து தற்போது இயக்குனருடன் விவாதித்து வருகிறார் பாபு ஆண்டனி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!