
இளையராஜா மனு : இசை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
இந்தியன் ரிகார்டு உற்பத்தி நிறுவனம் தாக்கல் செய்த மனு: இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்து வெளியான 20 தமிழ் படங்கள் மற்றும் இதர மொழிகளில் வெளியான சில படங்களுக்கு, தயாரிப்பாளர்களிடம் இருந்து பதிப்புரிமை பெற்றுஉள்ளோம். அதனால், இந்த படங்களின் இசையை பயன்படுத்த, இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 22 படங்களுக்கான இசையை பயன்படுத்த, இளையராஜா மற்றும் இரண்டு மியூசிக் நிறுவனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதிகள் துரைசாமி, தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இளையராஜா சார்பில், மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர்கள் கே.தியாகராஜன், ஏ.சரவணன் ஆஜராகினர். மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி, இந்தியன் ரிக்கார்டு உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட மூன்று இசை நிறுவனங்களுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!