
பான் இந்தியா என்கிற வார்த்தை எரிச்சலூட்டுகிறது : துல்கர் சல்மான்
இதுபற்றி அவர் கூறும்போது, "பான் இந்தியா என்கிற வார்த்தை உண்மையிலேயே என்னை எரிச்சல் அடைய வைக்கிறது. இந்த வார்த்தையை கேட்பதற்கு கூட நான் விரும்பவில்லை. சினிமாவில் உள்ள திறமையாளர்கள் ஒவ்வொரு மொழியிலும் சென்று தங்களது திறமைகளை பரிமாறி கொள்ளட்டும்.. அது வரவேற்கத்தக்கது. ஆனால் நாமெல்லாம் ஒரே நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்க திரைப்படங்கள் எப்போதாவது பான் அமெரிக்கா என்று சொல்வதுண்டா ? நான் இதுவரை அப்படி கேட்டதும் இல்லை.
தற்போது இந்தியா முழுவதும் பயணிக்கின்ற பான் இந்திய படம் என சொல்லப்படுகின்ற படம் நிச்சயம் அனைத்து மொழிகளுக்கும் ஆன படமாக எடுக்கப்படுவதில்லை. பான் இந்தியா படம் என்கிற ஒன்றை நாம் கட்டமைக்க முடியாது. அப்படி வெளியாகும் படங்கள் எல்லாம் குறிப்பிட்ட ஒரு மார்க்கெட்டை மையப்படுத்தி மட்டுமே எடுக்கப்பட்டவை ஒரே மார்க்கெட்டுகாக எடுக்கப்பட்டிருந்தாலும் எந்த ஊருக்கும் பொருந்தும் என்கிற ஒரு கதையை. எல்லா ஊர்களிலும் ரிலீஸ் செய்தால் அதுதான் இந்தியா படம்" என்று கூறியுள்ளார் துல்கர் சல்மான். பான் இந்திய படங்கள் மீது அவருக்கு என்ன அவ்வளவு கோபமோ தெரியவில்லை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!