
காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் - ‛அஜித் 62 பற்றி விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி
ஆம் முதன்முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க போகிறார். இதற்கான அறிவிப்பை படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் இந்தாண்டு இறுதியில் டிசம்பர் மாதம் துவங்கும் என்றும், அடுத்தாண்டு மத்தியில் ரிலீஸாகும் எனவும் கூறி உள்ளனர்.
முதன்முறையாக அஜித் படத்தை இயக்க உள்ளது பற்றி விக்னேஷ் சிவன் கூறுகையில், ‛‛எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும். காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும்"" என பதிவிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் இப்போது தான் அஜித் படத்தை முதன்முறையாக இயக்க போகிறார் என்றாலும் அஜித்தின் என்னை அறிந்தால், வலிமை உள்ளிட்ட சில படங்களுக்கு பாடல் வரிகள் எழுதி உள்ளார். குறிப்பாக என்னை அறிந்தால் படத்தில் வரும் அதாரு உதாரு பாடலின் வரிகளை இப்போது மேலே தனது மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!