
மீண்டும் படம் இயக்குகிறார் உபேந்திரா
தற்போது 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார். இது இந்திய மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படம். தென்னிந்தியாவின் மிகப்பெரிய இசை நிறுவனமான லஹரி நிறுவனம் லஹரி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி முதல் படமாக உபேந்திரா படத்தை தயாரிக்கிறது. உபேந்திரா படத்தை இயக்குவதோடு நடிக்கவும் செய்கிறார். கன்னடம், இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய 4 இந்திய மொழிகளில் பான்-இந்திய திரைப்படத்தினை உருவாக்கவுள்ளனர்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள உபேந்திரா படம் பற்றி கூறியிருப்பதாவது: பெரிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த பான்-இந்தியன் படத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி. சிந்தனையைத் தூண்டும் வகையிலான சினிமா அனுபவத்தை ஒட்டுமொத்த இந்தியப் பார்வையாளர்களும் விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன்.
உபேந்திரா என்ற சகாப்தத்தை உருவாக்கியதே ரசிகர்கள் தான், 33 வருடங்களாக திரைக்கதை வசனம் எழுதிய ரசிகர்களின், விசில் மற்றும் கிளாப்ஸ் மூலம் தான் நான் எப்போதும் இயங்கி வருகிறேன். இந்தியத் திரைப்பட ரசிகர்களுக்கு இந்தப் படத்தை அர்ப்பணிக்கிறேன். என்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!