
இயக்குனருடன் சண்டை போட்டு வாய்ப்பு பெற்ற ஜனனி
அவர் மேலும் கூறியதாவது: இந்த படத்தின் இயக்குனர் பிரையன் ஜார்ஜை, தெகிடி படத்திலிருந்தே தெரியும், அவரிடம் நீங்கள் இயக்குனராகி படம் எடுக்கும்போது நான் தான் அதில் நடிப்பேன். வேறு யாரையாவது நாயகியாக போட்டால் உங்களிடம் வந்து சண்டை போடுவேன் என்றேன். நான் இதனை ஜாலியாகத் தான் அவரிடம் சொன்னேன். ஆனால் உண்மையிலேயே என்னை நடிக்க வைத்துவிட்டார்.
இந்தக்கதையே வித்தியாசமாக இருந்தது என்று சொன்னால் அது வழக்கமாக இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்தது எல்லாமே மேஜிக்தான். ஒரே ஒரு விஷயத்தை சொல்கிறேன். ஒரு நாள் 5 காட்சி எடுக்க வேண்டும், ஆனால் அன்று நல்ல மழை, அதனால் அந்த காட்சிகள் மழையில் நடப்பதாக காட்சியை மாற்றி எடுத்தோம்.
ஒரு காட்சியை மழையில் எடுத்தால் எல்லா காட்சியையும் மழையில் எடுக்க வேண்டுமே. அதனால் மழை நின்று விடக்கூடாது என்று வேண்டிக்கொண்டே காட்சிகளை எடுத்தோம். மேஜிக் மாதிரி கடவுள் ஆசிர்வாதத்தில் மழை நிற்காமல் பெய்தது. அந்த ஆசிர்வாதம் படத்திற்கும் கிடைக்க வேண்டும் என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!