
ஊரடங்கு தளர்வு : திரையுலகினர் மகிழ்ச்சி
இந்நிலையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் 50 சதவீத இருக்கை பிப்ரவரி 15 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத இருக்கை இருந்தாலும் பழைய படி தினசரி 4 காட்சிகளை நடத்த தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வாரத்திற்கு ஒரிரு படங்களாக வெளியிட்டால் போட்டிகள் அதிகம் இல்லாமல் படங்களுக்கு வசூலைப் பெற வழி ஏற்பட்டுள்ளது. இதனால், திரையுலகத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மாதத்தில் வெளிவந்த சிறிய பட்ஜெட் படங்கள் எதுவும் மக்களை வரவழைக்காத காரணத்தால் பல தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. அடுத்த வெள்ளிக்கிழமை முதலே சில முக்கிய படங்கள் வெளிவர தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு முன்னணி நடிகரின் படம் வெளிவரும் எனத் தெரிகிறது. இதனால், தியேட்டர்காரர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!