
விவாகரத்து பதிவை டெலிட் செய்த சமந்தா
அதன்பின் கடந்த வருடம் அக்டோபர் மாதம் சமந்தா, நாகசைதன்யா இருவரும் சமூக வலைத்தளங்களில் தங்களது பிரிவை ஒரே மாதிரியான அறிக்கையாக வெளியிட்டனர்.
தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அந்த அறிக்கைப் பதிவை சமந்தா தற்போது நீக்கியுள்ளார். நாகசைதன்யாவின் சமூக வலைத்தளங்களில் அந்தப் பதிவு அப்படியே இருக்க சமந்தா மட்டும் நீக்கியிருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனது பிரிவு பற்றிய அறிவிப்புக்குப் பிறகு நாகசைதன்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கினார் சமந்தா. தற்போது பிரிவு பற்றிய அறிவிப்பையும் நீக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!