
தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு குறித்து கடந்த மாதமே பதிவிட்ட செல்வராகவன்
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி தனுஷின் அண்ணனான இயக்குனர் செல்வராகவன் வெளியிட்ட பதிவு ஒன்று மீண்டும் சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கிறது. காரணம் அந்த பதிவில், தயவுசெய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டுவிட்டு நன்கு உணவருந்திவிட்டு ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று அந்தப் பிரச்னையே இருக்காது. இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள் என பதிவிட்டு இருந்தார் செல்வராகவன். தனுஷ் ஐஸ்வர்யாவிற்கிடையே பிரச்னை நடந்து கொண்டிருந்தபோதுதான் செல்வராகவன் இப்படி பதிவிட்டிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!