
இலங்கையில் தயாரான சினம்கொள்
படம் பற்றி இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கூறியதாவது: 2009ல் இலங்கையில் நடந்த இறுதி போருக்கு பிறகு அங்கு எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் இது. யுத்தத்திற்கு பிறகு இன்றைய ஈழ மக்களின் வாழ்வியலை பேசும் படம். போரின் வடுக்களோடு வாழும் மக்களின் அவலத்தை மட்டுமல்லாது, போருக்கு பிறகு அவர்கள் சந்தித்த நெருக்கடிகளையும், பொருளாதார சிக்கல்களையும், சிறையிலிருந்து வெளிவந்த போராளிகளின் வாழ்வியலையும் சொல்லியிருக்கிறோம்.
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் மட்டுமே படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். அங்கே படப்பிடிப்பை நடத்த மிகவும் சிரமப்பட்டோம் சிங்களர்களுக்கு எதிரான படம் என்று படப்பிடிப்பை நடத்த விடாமல் செய்துவிட்டார்கள். அதனால் சுமார் 10 நாட்களுக்கும் மேல் 75 பேருடன் யாழ்ப்பாணத்தில் சும்மா இருந்தோம். அதனால் எங்களுக்கு பண இழப்பும் ஏற்பட்டது. எப்படியோ படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படம் வருகின்ற 14ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!