
இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா
தமன் கூறுகையில், ‛‛கொரோனா இரண்டு தடுப்பூசி செலுத்திய பின்னரும் எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்தது. லேசான அறிகுறி என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் எனது மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் தான் சிவகார்த்திகேயனின் 20வது பட பணிகளை துவங்கி அது தொடர்பான நிகழ்வுகளை மகிழ்ச்சி உடன் பகிர்ந்து இருந்தார் தமன். இப்பட இசை பணியின்போது சிவகார்த்திகேயன், இயக்குனர் அனூதீப் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். இதனால் இவர்களும் இப்போது கலக்கத்தில் உள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!