
பொங்கல் - புதிய படங்கள் வெளிவர குறையும் வாய்ப்புகள்
இந்த ஆண்டின் முதல் பெரிய படமாக இந்த வாரம் ஜனவரி 7ம் தேதி வெளிவர இருந்த "ஆர்ஆர்ஆர்" படத்தைத் தள்ளி வைத்துவிட்டார்கள். பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள "ராதேஷ்யாம்" படம் ஜனவரி 14 அன்று வெளியாகும் என்று நேற்று வரை தகவல்கள் வெளிவந்தன. கர்நாடகாவில் தற்போது வார இறுதி நாட்களில் ஊரடங்கு விதித்துவிட்டார்கள்.
தமிழகத்தில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் என்பது இன்று தெரிய வரும். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள படங்கள் திட்டமிட்டபடி வெளிவர வாய்ப்பில்லை என்பது தான் தற்போதைய சூழ்நிலை.
"ராதேஷ்யாம், வலிமை, வீரமே வாகை சூடு" ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தள்ளி வைக்கவே அதிக வாய்ப்புகள். மிக விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!