
லண்டனில் தொடங்கும் சிவகார்த்திகேயனின் தெலுங்கு படம்
ஜன 01, 2022
Advertisement
தமிழில் தனுஷ் நடித்த 3 என்ற படத்தில் அவரது நண்பனாக ஒரு காமெடி வேடத்தில் அறி முகமானவர் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் நடித்து வந்தபோதே பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் நாயகனாக கமிட்டாகிவிட்டார்.அந்த வகையில் இதுவரை 19 படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் நடிக்கும் 20ஆவது படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளார்.
இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்ற தகவல்கள் விரைவில் வெளிவர உள்ளன. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் தெலுங்கு படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி அதன்பிறகு புதுச்சேரியில் நடக்கிறது.இந்த தகவலை அப்படத்தை தயாரிக்கும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளது. அதோடு விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்ட போதும் தேதி குறிப்பிடப்படவில்லை.
இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்ற தகவல்கள் விரைவில் வெளிவர உள்ளன. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் தெலுங்கு படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி அதன்பிறகு புதுச்சேரியில் நடக்கிறது.இந்த தகவலை அப்படத்தை தயாரிக்கும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளது. அதோடு விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்ட போதும் தேதி குறிப்பிடப்படவில்லை.
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!