
பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்கு ஐஸ்வர்யா ராய் விதித்த நிபந்தனை
பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வனில் முக்கிய ரோலில் நடிப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவரின் காட்சிகள் சில இன்னும் படமாக்கப்பட வேண்டி இருக்கிறதாம். ஏன் தாமதமென்று விசாரித்தால், இரண்டு நாட்கள் முழுமையாக நீருக்குள் படப்பிடிப்பு எடுக்க வேண்டியிருக்கிறதாம். இந்த படப்பிடிப்பிற்கு ஐஸ்வர்யா ராய் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார்.
என்னவென்றால், இரண்டு நாட்கள் நீருக்குள் நடிக்க வேண்டியிருப்பதால், நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருக்க முடியாது. அதனால், நீரினை ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில் பராமரிக்க வேண்டும். அதாவது, மிதமான சூட்டுடன் நீர் இருக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். ஐஸ்வர்யா ராயின் நிபந்தனையைச் சாத்தியப்படுத்த வேண்டுமென்பதற்காகப் படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாகிறதாம். விரைவிலேயே, ஐஸ்வர்யா ராய் கேட்டபடியே படப்பிடிப்பும் நடக்கும் என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!