
சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்
அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
ரஜினிகாந்த், மகேஷ் பாபு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதால் கீர்த்தி சம்பளத்தை உயர்த்திவிட்டதாகச் சொல்கிறார்கள். அவர் கேட்கும் சம்பளம் இதை விட அதிகம், ஆனாலும், 3 கோடிக்கே அவர் நடிக்க சம்மதம் சொல்வதாகச் சொல்கிறார்கள்.
நடிகைகளில் நயன்தாரா அதிகபட்சமாக 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். மற்ற நடிகைகளின் சம்பளம் நயன்தாரா வாங்கும் சம்பளத்தை விட குறைவுதான் என்பது கூடுதல் தகவல்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!