
ஜெய்ப்பூர் மகாராணியின் பயோபிக்கில் நடிக்க விரும்பும் பூஜா ஹெக்டே
இந்தநிலையில் பூஜா ஹெக்டேவும் அப்படி ஒரு பிரபலத்தின் சுயசரிதையில் நடிக்க ஆசை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார் பூஜா ஹெக்டே. அப்போது தனக்கு ஜெய்ப்பூர் மூன்றாவது மகாராணி காயத்ரி தேவியின்யின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருப்பதாக கூறினார். ஜெய்ப்பூர் மகாராணியான காயத்ரிதேவி 12 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் ராஜமாதா என ஜெய்ப்பூர் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இவர், எமர்ஜென்சி காலத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!