
நவம்பர் மாதம் முதல் தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி?
அக் 12, 2021
Advertisement
கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு தமிழ்நாட்டில் தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன அப்போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.
அரண்மனை 3 படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதால் இந்த வாரம் முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என திரையுலகத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் தொடர்ந்து 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தீபாவளி முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி சமயத்தில் புதிய படங்கள் வருகை அதிகமாக இருக்கும் அப்போது தியேட்டர்களுக்கு 100 சதவீத இருக்கைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் திரையுலகினரும் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
தீபாவளிக்கும், தீபாவளிக்கு பிறகும் பல புதிய படங்கள் வெளிவர உள்ளன. 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தால் தங்களது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நல்ல வசூல் இருக்கும் என அப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அரண்மனை 3 படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதால் இந்த வாரம் முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என திரையுலகத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் தொடர்ந்து 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தீபாவளி முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி சமயத்தில் புதிய படங்கள் வருகை அதிகமாக இருக்கும் அப்போது தியேட்டர்களுக்கு 100 சதவீத இருக்கைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் திரையுலகினரும் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
தீபாவளிக்கும், தீபாவளிக்கு பிறகும் பல புதிய படங்கள் வெளிவர உள்ளன. 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தால் தங்களது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நல்ல வசூல் இருக்கும் என அப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!