
நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை
பிப் 01, 2025
Advertisement
நாசர் தலைமையிலான புதிய நிர்வாகிகள் தேர்வான பிறகு 2016ம் ஆண்டு நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட பணிகள் தொடங்கியது. சுமார் 35 கோடியில் இந்த கட்டிடத்தை கட்ட தீர்மானிக்கப்பட்டது. திரையரங்கம், திருமண மண்டபம், ஒளிப்பதிவு கூடங்கள், ஒலிப்பதிவு கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள். நடிப்பு பயிற்சி மையம் ஆகியவை கட்ட தீர்மானிக்கப்பட்டது.
60% கட்டிடப் பணிகள் முடிவடைந்த நிலையில் நடிகர் சங்கம் தேர்தல் தொடர்பான வழக்குகள், பொருளாதார நெருக்கடி காரணமாக பணிகள் தடைபட்டது. தற்போது வழக்குகள் முடிந்து நாசர் தலைமையிலான நிர்வாகிகள் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு கட்டிட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. திட்டமிட்டதை விட கூடுதலாக 50 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் கட்டிடப் பணிகளை பார்வையிட்டனர். பின்னர் இன்ஜினியர்களுடன் ஆலோசனை நடத்தினர். வருகிற ஏப்ரல் மாதம் கட்டிடத்தை திறக்க ஏற்பாடு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
========
60% கட்டிடப் பணிகள் முடிவடைந்த நிலையில் நடிகர் சங்கம் தேர்தல் தொடர்பான வழக்குகள், பொருளாதார நெருக்கடி காரணமாக பணிகள் தடைபட்டது. தற்போது வழக்குகள் முடிந்து நாசர் தலைமையிலான நிர்வாகிகள் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு கட்டிட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. திட்டமிட்டதை விட கூடுதலாக 50 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் கட்டிடப் பணிகளை பார்வையிட்டனர். பின்னர் இன்ஜினியர்களுடன் ஆலோசனை நடத்தினர். வருகிற ஏப்ரல் மாதம் கட்டிடத்தை திறக்க ஏற்பாடு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
========
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!