
மீண்டும் ஆக்ஷன் படத்தில் விஜய்சேதுபதி
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம் பற்றி இயக்குநர் நித்திலன் கூறும்போது, “இது ஆக்ஷன் படம். இந்தப் படத்தில் சாதாரண மனிதனை அசாதாரணமான மனிதனாக மாற்றும் சமூகம் பற்றிய கதை. பழிவாங்கும் கதை என்றும் சொல்லலாம். வில்லனுக்கு கதையில் பெரிய முக்கியத்துவம் இருப்பதால் சில முன்னணி நடிகர்களுடன் பேசி வருகிறோம். சென்னையில் இன்று (பிப் 1)படப்பிடிப்பு தொடங்குகிறது. ஹீரோயின் முடிவாகவில்லை. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!