
தள்ளிப் போகிறது டுயூட்
இப்படத்தை அக்டோபர் மாதமான தீபாவளிக்கு வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். தீபாவளியை முன்னிட்டு அந்த தேதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள மற்றொரு படமான "லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி" படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாகும் என்று நேற்று அறிவித்துள்ளார்கள்.
ஒரே வாரத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இரண்டு படங்களும் வெளியாக வாய்ப்பில்லை. அதனால், "டுயூட்" படம் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த மூன்று வாரங்களாக ஸ்டிரைக் நடந்து வந்தது. அதனால், அங்கு எந்த படப்பிடிப்பும் நடக்கவில்லை, ஸ்டுடியோக்களும் செயல்படவில்லை. இன்று முதல்தான் பழையபடி பணிகள் ஆரம்பமாக உள்ளன.
"டுயூட்" படத்தை தெலுங்கு நிறுவனம் தயாரிப்பதால் இதன் பணிகள் ஐதராபாத்தில் தான் நடந்து வருகிறது. எனவே, கடந்த மூன்று வாரங்களாக எந்த வேலையும் நடக்காததால் அவர்களும் படத்தைத் தள்ளி வைக்கும் முடிவுக்கு வந்துள்ளார்களாம். அதனால்தான், "லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி" படத்தின் வெளியீடு பற்றி நேற்று அறிவித்துள்ளார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!