
சிரஞ்சீவிக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை பாராட்டு
கொரோனா நெருக்கடி தொண்டு அமைப்பு என்ற ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் உதவிகளைச் செய்ய முன்னெடுத்தார். அதன் மூலம் திரையுலகத்தினரைச் சேர்ந்த பலருக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் கடந்த வருடம் வழங்கப்பட்டது.
தற்போது கொரோனா தடுப்பூசி போடுவதற்காக திரையுலகத்தைச் சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு கொரானோ தடுப்பூசியை இலவசமாகப் போடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
சிரஞ்சீவியின் இந்த முயற்சிக்கு தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். “இந்த நெருக்கடியான கொரோனா பரவல் நேரத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி 45 வயதிற்கு மேற்பட்ட திரையுலகத்தினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இலவச தடுப்பூசி போடுவதாக அறிவித்துள்ளார். இந்த சமூகத்திற்காக அவர் செய்யும் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!