
ஹேக்கிங் செய்யப்பட்ட ஸ்ருதிஹாசனின் எக்ஸ் கணக்கு
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்ருதிஹாசன், “என்னுடைய எக்ஸ் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அதில் இருப்பவை நான் பதிவிட்டது அல்ல. அதனால் நான் அந்தப் பக்கத்திற்கு மீண்டும் திரும்பி வரும் வரை யாரும் அந்த பக்கத்தில் பதில் கருத்து போட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமும் ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அது ஹேக் செய்யப்படவில்லை என்றாலும் கூட, அந்த சமயத்தில் தனது மொபைல் போனில் இன்ஸ்டாகிராம் வேலை செய்யவில்லை என்று சில நாட்கள் வரை அதை பயன்படுத்த முடியாமல் சிரமங்களை சந்தித்தார் ஸ்ருதிஹாசன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!