
சரத்குமாருக்கு 2வது முறையாக கொரோனா பாதிப்பு
பிப் 02, 2022
கொரோனா மூன்றாவது அலை பரவல் சற்றே கட்டுப்பட்டது போல தோன்றினாலும் அதன் பாதிப்பு தொடரவே செய்கிறது. குறிப்பாக திரையுலகை சேர்ந்தவர்களை, அதிலும் உடல் ஆரோக்கியத்தை உடற்பயிற்சி மூலம் பேணி காப்பவர்களையும் கூட கொரோனா பதம் பார்த்து வருகிறது. அந்தவகையில் நடிகர் சரத்குமார் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறை. கடந்த வருடம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் முதன்முறையாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டார் சரத்குமார். தற்போது தனக்கு கோவிட் பாதிப்பு உள்ளது என்பதை தெரியப்படுத்தியுள்ள சரத்குமார். சமீப நாட்களாக தன்னுடன் சந்திப்பு நிகழ்த்திய அனைவரையும் ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ளுமாறும் கவனமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறை. கடந்த வருடம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் முதன்முறையாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டார் சரத்குமார். தற்போது தனக்கு கோவிட் பாதிப்பு உள்ளது என்பதை தெரியப்படுத்தியுள்ள சரத்குமார். சமீப நாட்களாக தன்னுடன் சந்திப்பு நிகழ்த்திய அனைவரையும் ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ளுமாறும் கவனமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!