
மழையால் தவிக்கும் டிசம்பர் மாத வெளியீடுகள்
இந்நிலையில் இரண்டாம் வெள்ளிக்கிழமை வந்த படங்களும் குறிப்பிடும்படி வசூலைத் தரவில்லை. கடந்த வாரம் வெளியான படங்களில் "பைட் கிளப்" படம் மட்டும் 5 கோடியே 75 லட்சம் வசூலைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் கடந்த ஞாயிறன்று தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை ஏற்பட்டதால் கடந்த மூன்று நாட்களாக அப்பகுதிகளில் தியேட்டர்களை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்கள் இன்னும் படங்களைப் பார்க்கும் மனநிலைக்கு வராத நிலையில், தென் மாவட்டங்களிலும் வெள்ளத் தாக்கம் இருப்பதால் இந்த வாரம் வெளியாக உள்ள படங்களுக்கும் அதே சிக்கல் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"சலார்" உள்ளிட்ட படங்களைக் கூட வாங்கி வெளியிட யோசிக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த டிசம்பர் மாதம் திரையுலகிற்கு சொல்லிக் கொள்ளும்படி அமையாது என்று திரையுலகினர் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!