
பூஜா ஹெக்டேவை தேடி விமானத்தில் பறந்து வந்த சைக்கிள்
“இந்தப்படத்தில் நடித்தபோது என்னுடைய உடைகள் அனைத்தையும் ஒரு பெட்டியிலேயே வைத்து பொக்கிஷமாக பாதுகாத்து வந்தனர். நான் அந்த உடைகளை விரும்பி அணிந்தாலும், அவற்றில் ஒன்றைக்கூட எனது வீட்டிற்கு எடுத்து செல்லவில்லை. ஆனால் இந்தப்படத்தில் நான் பயன்படுத்திய சைக்கிள் மீது மட்டும் எனக்கு ரொம்பவே ஒட்டுதல் ஏற்பட்டது. இதை எப்படியோ தெரிந்து கொண்ட படக்குழுவினர், படப்பிடிப்பு முடிந்து நான் மும்பை சென்ற சில நாட்களிலேயே, ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலமாக அந்த சைக்கிளை எனக்கே அனுப்பி வைத்துவிட்டனர். அந்தப்படத்தில் பணியாற்றியதன் ஞாபகார்த்தமாக இப்போது என் வீட்டை அலங்கரிக்கிறது அந்த சைக்கிள்” என கூறியுள்ளார் பூஜா ஹெக்டே..

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!