
ராதே ஷ்யாம் படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே
ஜன 20, 2021
Advertisement
மிஸ்கின் இயக்கிய முகமூடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.. ஆனால் அந்த படம் வரவேற்பை பெறாத நிலையில் ராசியில்லாத நடிகை என ஒதுக்கி வைக்கப்பட்டார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தெலுங்கு சினிமாவில் அவரது ராசி ஒர்க் அவுட் ஆக தொடங்கியுள்ளது. அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. அதிலும் கடந்த வருடம் தெலுங்கில் வெளியான அல வைகுண்டபுரம்லூ படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா பாடல் இவரை ரசிகர்களுக்கு மிக நெருக்கமாக கொண்டு சென்றது.
இந்தநிலையில் தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகி வரும் இந்தப்படத்தில் தற்போது தன்னுடைய போர்ஷனை நடித்து முடித்துவிட்டார். இந்த மகிழ்ச்சியை தன்னந்தனியாக கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் பூஜா.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கேள்விகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கேக் ஒன்றுமே அனைத்துக்குமான பதிலாக இருக்கும்.. ராதே ஷ்யாம் படப்பிடிப்பு முடிந்தது” என கூறியுள்ளார் பூஜா.
இந்தநிலையில் தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகி வரும் இந்தப்படத்தில் தற்போது தன்னுடைய போர்ஷனை நடித்து முடித்துவிட்டார். இந்த மகிழ்ச்சியை தன்னந்தனியாக கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் பூஜா.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கேள்விகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கேக் ஒன்றுமே அனைத்துக்குமான பதிலாக இருக்கும்.. ராதே ஷ்யாம் படப்பிடிப்பு முடிந்தது” என கூறியுள்ளார் பூஜா.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!