நாவலூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய கார் அங்காடியை நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நிருபர் ஒருவர், துக்ளக் தர்பார் படத்தில் அரசியல் நெடி அதிகமாக இருக்கிறதே என கேள்வி கேட்டார். அதற்கு அவர், “இனிமேல் கதையை சொல்லிவிட்டு தான் படம் எடுக்க வேண்டும் போல் தெரிகிறது. படம் வந்தால் தானே அது எப்படிப்பட்ட படம் என தெரியும். பிரச்சனை செய்வதற்காக நாங்கள் படம் எடுக்கவில்லை. மக்களை மகிழ்விக்க தான் படம் எடுக்கிறோம். எந்த சர்ச்சைகளும் எங்களுக்கு தேவையில்லாத வேலை. பிரச்னை செய்யவும் நேரம் இல்லை" என்று கூறியுள்ளார்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!