
ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய கன்னட நடிகர் அர்ஜுன் கவுடா
ஏப் 30, 2021
Advertisement
கொரோனா பரவல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திரையுலகத்தைச் சேர்ந்த சில பிரபலங்கள் மக்களுக்கு உதவிடும் வகையில் பல சமூக சேவைகளைச் செய்து வருகிறார்கள்.
"யுவரத்னா, ருஸ்தம்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கன்னட நடிகர் அர்ஜுன் கவுடா மக்களுக்கு உதவுவதற்காக தற்போது ஆம்புலன்ஸ் டிரைவராக மாறியுள்ளார்.
"புரொஜக்ட் ஸ்மைல் டிரஸ்ட்" என்ற அமைப்புடன் இணைந்து அவர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார். அது பற்றிய செய்தி வெளிவந்ததும் அவரை வாழ்த்தி பலரும் மெசேஜ் அனுப்பி வருகிறார்கள்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அர்ஜுன் கவுடா, “நான் உரிய பயிற்சி எடுத்தும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன். உங்கள் வாழ்த்துகளால் நிறைத்துவிட்டீர்கள். கர்நாடக மக்களுக்கு இப்படி சேவை செய்வதில் நான் பெருமை கொள்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"யுவரத்னா, ருஸ்தம்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கன்னட நடிகர் அர்ஜுன் கவுடா மக்களுக்கு உதவுவதற்காக தற்போது ஆம்புலன்ஸ் டிரைவராக மாறியுள்ளார்.
"புரொஜக்ட் ஸ்மைல் டிரஸ்ட்" என்ற அமைப்புடன் இணைந்து அவர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார். அது பற்றிய செய்தி வெளிவந்ததும் அவரை வாழ்த்தி பலரும் மெசேஜ் அனுப்பி வருகிறார்கள்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அர்ஜுன் கவுடா, “நான் உரிய பயிற்சி எடுத்தும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன். உங்கள் வாழ்த்துகளால் நிறைத்துவிட்டீர்கள். கர்நாடக மக்களுக்கு இப்படி சேவை செய்வதில் நான் பெருமை கொள்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!