
கதை நாயகனாக நடிக்கும் காளி வெங்கட்
1995ல் நடக்கும் இந்த கதையில், அரசு பள்ளியில் படிக்கும் தனது மகனை தனியார் பள்ளியில் சேர்க்க போராடும் பாசக்கார தந்தையாக நடிக்கிறார். பல டிவி சீரியல்களில் நடித்த ரேஷ்மா முரளிதரன் ஹீரோயின். அப்பா, மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் சென்னை, சிவகங்கையில் படமாக்கப்பட உள்ளது. ஜென்சன் திவாகர், ஆடுகளம் நரேன், மைம் கோபி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.
படம் குறித்து பேசியுள்ள காளி வெங்கட், ‛படத்தில் நான் ஹீரோ அல்ல, கதையும், அந்த சிறுவனும் தான் ஹீரோ" என்கிறார்


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!