
மே மாதத்திற்கு முன்பு வரை ‛ஜனநாயகன் வெளிவர வாய்ப்பில்லையாம்
என்றாலும் தற்போது வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு தணிக்கை சான்றிதழ் வழங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் படம் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ஏப்ரல் 30ம் தேதி வரை வெளியீடு சாத்தியமில்லை என்று கனடா விநியோக நிறுவனமான "யார்க் சினிமாஸ்" அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் தனது எக்ஸ் பதிவில் "ஏப்ரல் 30க்கு முன்பு "ஜனநாயகன்" வெளியாகாது. முன்பதிவு செய்தவர்களில் யாருக்காவது பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றால், தியேட்டர்களை தொடர்பு கொள்ளலாம். புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும் மெம்பர்ஷிப் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் ஜனநாயகன் படம் அரசியல் படம் என்பதால் அது வெளியாக தேர்தல் கமிஷன் அனுமதிக்காது என்று கூறப்படுகிறது. இதனாலேயே படம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தான் வெளிவரும் என்று தெரிகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!