
நான் உயிருடன் இருக்கிறேன் : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சாரதா
ஆக 09, 2021
Advertisement
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நாற்பது வருடங்களுக்கு முன்பு கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சாரதா. மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்தவர் இவர் தான். ஊர்வசி என்கிற பட்டம் பெற்ற இவர் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதும் பெற்றவர். இந்தநிலையில் கடந்த இரு தினங்களாக இவர் இறந்துவிட்டதாக சோஷியல் மீடியாவில் திடீரென ஒரு வதந்தி பரவியது.
இதனை தொடர்ந்து பலரும் சாரதாவுக்கு போன் செய்து விசாரிக்க, ரொம்பவே சங்கடப்பட்டு போனார் சாரதா. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “நான் உயிருடன் நலமாக தான் இருக்கிறேன். எனக்கு எந்த நோய் நொடியும் இல்லை. அதனால் வதந்திகளை நம்ப வேண்டாம்.. ஒருத்தரை பற்றி வதந்தி பரப்ப வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்க கூடாது..” என பதிலடி கொடுத்துள்ளார் சாரதா.
இதனை தொடர்ந்து பலரும் சாரதாவுக்கு போன் செய்து விசாரிக்க, ரொம்பவே சங்கடப்பட்டு போனார் சாரதா. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “நான் உயிருடன் நலமாக தான் இருக்கிறேன். எனக்கு எந்த நோய் நொடியும் இல்லை. அதனால் வதந்திகளை நம்ப வேண்டாம்.. ஒருத்தரை பற்றி வதந்தி பரப்ப வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்க கூடாது..” என பதிலடி கொடுத்துள்ளார் சாரதா.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!